Friday, June 24, 2016

வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் - பரீட்சைக்கு முன்னரே வினாத்தாள் பொதி உடைக்கப்பட்டது.

வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் - நடத்தப்படுகின்ற தரம் 4 முன்னோடிப்பரீட்சை நாளை 25.06.2016 சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் - வவுனியா தெற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் இன்றே (24.06.2016 – வெள்ளிக்கிழமை) பரீட்சை வினாத்தாள்கள் உடைக்கப்பட்டு – வவுனியாவில் தனியார் கல்வி நிறுவனத்தில் கற்பிக்கும் அப்பாடசாலையின் ஆசிரியர் ஒருவரிடம் அப்பாடசாலையின் கீழ்ப்பிரிவுப் பகுதித்தலைவரால் வழங்கப்பட்டுள்ளது. பரீட்சை நேரத்துக்கு முன்னர் வினாப்பொதி உடைக்கப்பட்டமை முறையற்ற செயற்பாடாகும். அத்துடன் - இச்செயற்பாடுகள் - தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்லாத மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனவும் - வடமாகாணம் சார்ந்த பரீட்சை என்பதால் - ஏனைய வலயங்களுக்கு இடையிலான மாணவர்களிடையேயான பெறுபேற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே - இவ்விடயம் தொடர்பாக வவுனியா தெற்கு கல்வி வலயத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் - வடமாகாண கல்விப் பணிப்பாளரும் உரியமுறையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment