Tuesday, June 21, 2016

சித்தியடைந்தவர்களைக் கொண்டே அதிபர் வெற்றிடங்கள் நிரப்ப வடமாகாண முதலமைச்சர் பரிந்துரை – வரவேற்கிறது இலங்கை ஆசிரியர் சங்கம்


வடக்கு மாகாணத்தில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்கு போட்டிப்பரீட்சையில் தெரிவானவர்களைக் கொண்டே நிரப்பவேண்டும் என்று வடக்கு மாகாணக் கல்வியமைச்சுக்கு - கௌரவ முதலமைச்சர் பரிந்துரை செய்துள்ளதாக அறிகின்றோம். முதலமைச்சரின் இந்த நியாயமான அணுகுமுறையை இலங்கை ஆசிரியர் சங்கம் வரவேற்கின்றது. கடந்த 15.06.2016 அன்று கௌரவ முதலமைச்சருடனான சந்திப்பின்போது – போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்தவருக்கே அதிபர் நியமனம் வழங்கப்படவேண்டும் எனும் சட்டரீதியான ஆவணங்களையும் நியாயப்பாடுகளையும் தெளிவுபடுத்தியிருந்தோம். இதனைப் பரிசீலித்து - முதலமைச்சர் மேற்கொண்ட தெளிவான முடிவினையே வடமாகாணக் கல்வியமைச்சு நடைமுறைப்படுத்தவேண்டும்.

அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பினை மீறி - கடமைநிறைவேற்று அதிபர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு - ஒருபோதும் இலங்கை ஆசிரியர் சங்கம் அனுமதிக்கப்போவதில்லை. எனவே – முதலமைச்சரினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளையே வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை தெரிவிப்பதுடன் - பொறுப்புள்ள வடமாகாணசபையும் இதனை வலியுறுத்தவேண்டும்.
கௌரவ முதலமைச்சரின் பரிந்துரைகளையும் மீறி நியமனம் வழங்கப்படும் பட்சத்தில் நாம் தொழிற்சங்க நடவடிக்கைகளுடன், சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்பதை தெரிவிக்கின்றோம். என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment